K

Karthar Ennai

கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
என் கவலைகளை அவரிடம் சொல்வேன்
கர்த்தர் என்னை தேற்றுபவர்
என் பாரங்களை அவரிடம் தருவேன்

தாங்கி தாங்கி இளைத்துப் போனேன்
தாங்கும் உம்மை மறந்து போனேன்
தாங்கியே நடத்தும் உந்தன்
கரம்தனை பற்றிக் கொண்டேன்

எதையும் செய்ய இயலாத
ஏழை நீசன் நானே ஐயா
எல்லாமே செய்ய வைத்திடும்
உம் பாதத்திலே விழுந்து விட்டேன்

ஜெபித்தாலும் சோர்ந்து போகிறேன்
ஜெப வாழ்வில் தளர்ந்து போகிறேன்
ஜெபத்தை கேட்டிடும் உந்தன்
கிருபைகளை நம்பி வந்தேன்