K

Kuyavanae Kuyavanae

குயவனே குயவனே படைப்பின் காரணனே

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டுச் சென்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதை செல்ல
பாதையில் நடத்திடுமே

விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலைமதியா உம் கிருபையால்
உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத்
தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடமையாக்கிடுமே