M

Maamalai Meethinil Pothagam

மாமலைமீதினில் போதகம் கூறும்

மாமலை மீதினில் போதகம் கூறும்
மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய்
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்

ஆவியில் எளியவன் பாக்கியவான்
ஆண்டவர் ராஜ்ஜியம் அடைந்திடுவார்
துயரப்படுவோர் பாக்கியவான்
தேவனின் ஆறுதல் அடைந்திடுவார்

பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்
பூமியை என்றும் சுதந்தரிப்பார்
நீதியை காப்பவர் பாக்கியவான்
கர்த்தரின் திருப்தியை அடைந்திடுவார்

கர்த்தரின் நிந்தனை ஏற்பவர்கள்
கர்த்தரின் மகிழ்ச்சி அடைந்திடுவார்
பலன்கள் மிகுதி பெற்றிடுவான்
பரமனின் ராஜ்ஜியம் அடைந்திடுவார்