M

Maamalai Meethinil Pothagam

மாமலைமீதினில் போதகம் கூறும்

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய்

சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்

ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார்
துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார்

பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார்
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார்

கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார்
பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார்