M

Manavattiyae En Sapaiye

மணவாட்டியே என் சபையே

மணவாட்டியே என் சபையே
விழித்தெழு சீயோன் திருச்சபையே
உன்னில் மகிமை அடைந்திடவே
உன்னை பூவினில் கண்டெடுத்தேன்

உள்ளான அழகு என் பிரியம்
உபதேசத்தில் நிலைத்திருப்பாய்
என் பிரியமே ரூபவதி
உன்னில் நான் மகிழ்ந்திடுவேன்

கூர்மையும் புதிதும் யந்திரமாய்
மலைகளை நொறுக்கிடுவாய்
தகர்த்திடுவாய் குன்றுகளை
பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே

உந்தனின் கிரியை நான் அறிவேன்
உண்மை ஊழியம் செய்திடுவாய்
ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்
உன்னை நான் கனம் பண்ணுவேன்