N

Nal Meippan Ivarae

நல் மேய்ப்பன் இவரே

நல் மேய்ப்பன் இவரே
இயேசு நல் மேய்ப்பன் இவரே
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே

ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்
ஆடுகள் முன்னே செல்லுகின்றார்
அவரின் பின்னே சென்றிடுவோம்

கள்வர் மந்தையை சாடிடும் போதும்
கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்
பிள்ளையைப் போல தோள்களிலே
கள்ளமில்லா துயில் கொண்டிடுமே

மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை
மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்
குரலொலி கேட்டு தேடிடுமே
குயவனின் கையில் அடங்கிடுமே