N

Nilaiyaana Singasanam En

நிலையான சிங்காசனம் என் இயேசு

நிலையான சிங்காசனம்
என் இயேசு எனக்குத் தந்தார்
அவர் இருக்கின்ற உயரத்திலே
என்னை அவருடன் அமரச் செய்தார்

நான் பரிசுத்தவானாய் வாழ்வதற்காய்
இயேசு பாவமானார்
நான் பெலவான் என்று அழைக்கப்பட
இயேசு எனக்காக கைவிடப்பட்டார்

நான் செல்வந்தனாக வாழ்வதற்காய்
இயேசு ஏழையானார்
நான் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காய்
இயேசு எனக்காக சாபமானார்

நான் ஆரோக்கியமாக வாழ்வதற்காய்
இயேசு நொறுக்கப்பட்டார்
நான் பரலோக பாக்கியம் பெறுவதற்காய்
இயேசு எனக்காக உயிரைத் தந்தார்