O

Onrumillamalae Ninra Ennai

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்

தெய்வ அன்பு என்ன உன்னதம்
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
(தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே

தேவன் தானே என் அடைக்கலம்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.