O

Oru Thanthaiyai Pola

ஒரு தந்தையைப் போல நம்மை

ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலாய் – நம்மில் அன்பு வைத்தவர்
யார்! யார்! யார் தெரியுமா? அவர்
யார்! யார்! யார் தெரியுமா?

பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – அவர்
யார்? யார்? யார் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
யார்? யார்? யார் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?

உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலகத்தோற்ற முதல் தெரிந்த கொண்டவர் அவரே
உனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டாரே
உன்னை மீட்க தன்னுயிரை தந்து விட்டாரே
அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு
அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு

மரித்துவிட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் இயேசு இதை மறந்துவிடாதே
நீ வணங்கும் தெய்வம் கல்லும் மண்ணுமில்லையே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வமே
அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு
அவர்தான்? அவர்தான்? அவர்தான் இயேசு