P

Puthu Vaazhvu Vaazhnthiduvaen

புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனைப் பாடிடுவேன்

தேவன் தந்த வார்த்தையே
ஜீவன் வல்லமை தரும்
எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி
நல் வாழ்வு வாழ்ந்திடுவேன்

இதயத்தில் விசுவாசித்தேன்
என் வாயினால் அறிக்கை செய்தேன்
முப்பது அறுபது நூறத்தனையாய்
மகிழ்வோடு அறுத்திடுவேன்

என் தேவன் இவ்வாண்டிலே
பெரும் காரியம் செய்திடுவார்
என் மூலம் அவர் தம் நாமத்தினையே
மகிமைப்படுத்திடுவார்