S

Sabaiyai Katukiraar

சபையை கட்டுகிறார்

சபையை கட்டுகிறார்
இயேசு சபையை கட்டுகிறார்
உண்மை கடவுள் இயேசு
தனது சபையை கட்டுகிறார்
தூய ஆவி சக்தியாலே
கட்டி எழுப்புகிறார்

மனிதனுடைய அறிவினாலே
சபையை கட்டவில்லை
புத்திசாலித்தனத்தினாலும்
சபையை கட்டவில்லை
ஆவியானவரின் வல்லமையாலே
சபையை கட்டுகிறார்
பாவிகளை மனம் மாற்றி
கட்டி எழுப்புகிறார்

மாயாஜால மந்திரங்களால்
சபையை கட்டவில்லை
மதவாத தந்திரங்களால்
சபையை கட்டவில்லை
நோயை நீக்கி பேயை ஓட்டி
சபையை கட்டுகிறார்
மனதுக்குள்ளே நிம்மதி
தந்து கட்டி எழுப்புகிறார்

தீவிரவாதம் காட்டி மிரட்டி
சபையை கட்டவில்லை
அரசாங்க அதிகாரத்தால்
சபையை கட்டவில்லை
நம்பிக்கை வைக்கும் மக்களை வைத்து
சபையை கட்டுகிறார்
சாட்சியாக நிற்போரை வைத்து
கட்டி எழுப்புகிறார்