U

Udhavi Varum Kanmalai

உதவி வரும் கன்மலை

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார்  – உதவி

கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் – உதவி

கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார்
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார்  – உதவி

போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் – உதவி