உம் வழிகளை அறிந்தவன் யார்
உம் வழிகளை அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்
வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே
மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்
உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா