U

Ummaithaan Ummai

உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்
அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும்
தேவா உம் அன்பை எண்ணும்போது
பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
தேவா உம்மை எண்ணும் போது
பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
எல்லாமே நஷ்டம் என்கிறேன்

வேதம் சொல் சித்தம் செய்கிறேன்
உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன்
தேவா உம்மைபோல் என்ன காக்க
மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே
பூலோகில் யாருமில்லையே
பூலோகில் யாருமில்லையே