உம்மேல் வாஞ்சையாய்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிட்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்
என்னை விடுவிப்பீர் நிட்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்
ஏஷுவா ஏஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அழிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே
என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்