உண்மை அன்பு உறங்குவதில்லை
உண்மை அன்பு உறங்குவதில்லை -உம்
உண்மை அன்பு மறைவதே இல்லை
உன் அன்பொருநாள் வெளிப்படுமே கலங்காதே
உன் அன்பொருநாள் விளங்கிடுமே திகையாதே
உதவி செய்து உதை வாங்கித் தவிக்கின்றாயோ
உன் உள்ளமெல்லாம் காயங்களால் நிறைந்துள்ளதோ
நன்மை செய்தும் அது உனக்கு பயனில்லையோ
நாளெல்லாம் அதை நினைத்து
கலங்குகின்றாயோ
எனகென்ன செய்தாய் என்று கேட்கும் மக்கள் கூட்டமே
உன்னை என்ன செய்வேன் பார் என்று சொல்லும் கூட்டமே
என்ன செய்ய போகிறேன் என்னும் நெஞ்சமே
கலங்காதே நான் என்றும் உந்தன் பக்கமே
என் மகளே (னே) என்னை நீ எண்ணிப் பாரேன்
நான் கடந்து வந்த பாதைகள் தான் உனக்கும் தானே
மாயைகளை மனதில் நினைத்து சோர்ந்து போகாதே
நான் உனக்கு போதும் என்றும் உந்தன் வாழ்விலே