V

Vaalakkamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுமே

யேகோவா நிசியே நீர் என் தேவனே
யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்

செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம் போல் வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்

தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்வதில்லை நீர் இருப்பதாலே
தேவையை சந்திக்கும் தேவன் நீரே
உதவி செய்திடுவீர்