வழியும் நீரே ஒளியும் நீரே
வழியும் நீரே ஒளியும் நீரே
ஜீவனும் நீரே தேவனும் நீரே
நம்பி வந்தேன் நாயகன் இயேசுவே
என்றும் எந்தனின் துணை நீரே
நானே வழியும் சத்தியம் ஜீவன்
என்று உரைத்த எந்தன் இயேசுவே
மனதின் இருளை போக்கிட வந்த
மகிமை நிறைந்த தேவ தேவனே
நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி
மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே
எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே
எந்தன் மேன்மை இயேசு தேவனே
உந்தன் வாக்கு எந்தனின் தீபம்
என்னை தந்துமே உம்மை சாருவேன்
உந்தனின் பாதை என்றும் செல்லுவேன்
நித்திய ராஜனே இயேசு தேவனே
மகிமை தங்கும் உந்தன் சமுகம்
என்றும் என்னை தேற்றி ஆற்றுதே
கலங்காமல் பதறாமல்
உந்தன் பாதை என்றும் செல்லுவேன்