Y

Yaridam Solven Yaridam Solven

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே

இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா