இயேசுவை அறைந்தார்கள்
இயேசுவை அறைந்தார்கள் சிலுவையிலே
ஆணி அடித்தார்கள் கரங்களிலே
முள்முடி சூட்டி வாரினால் அடித்து
குத்தினார் விலாவிலே
கொல்கதா மலையில் குமாரன் இயேசு
திருரத்தம் சிந்தினார்
என் பாவம் நீங்கி சுகமாய் நான் வாழ
ஜீவ பலியாகினார்
நல்லோர்கள் மேலும் தீயோர்கள் மேலும்
நன்மைகள் செய்யும் தேவன்
அடிமையின் ரூபம் தாழ்மையின் கோலம்
எனக்காக எடுத்து வந்தார்
என் நோய்கள் சுமந்தார் வியாகுலம் அடைந்தார்
ஆத்தும மீட்பரே
கல்வாரி அன்புக்கு நிகரொன்றும் இல்லை
என்னைத் தாழ்த்திடுவேன்