Y

Yesuvin Naamathai

இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஸ்தோத்தரிப்பேன்

தேவன் பாதம் அமர்ந்து அவர் வார்த்தைகள் கேட்பேன்
தினமும் அவரின் முகத்தின் தரிசனம் பெறுவேன்
இயேசு ராஜனே என் இதய கீதமே
நேசரின் அன்பை எந்நாளும் பாடுவேன்

தேவா உந்தன் கிருபை அது எனக்கும் போதுமே
என்னை வழிநடத்தும் உமது கரமே
உமது கண்களில் நான் இரக்கம் பெற்றேனே
என் ஆயுள் முழுவதும் சங்கீதம் பாடுவேன்

மனமோ தளராது தேவமகிமையைப் புகழ்வேன்
சந்தோஷம் மகிழ்ச்சி அதனால் அடைவேன்
இயேசு தேவனே என்னில் உயிர் வாழ்கிறார்
அவர் பிரசன்னத்தால் நானும் பிரகாசிப்பேன்