A

Aarathanai Aarathanai Aarathanai

ஆராதனை ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்

நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
எல்லாம் மறக்கணும்
உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும்
இன்னும் உம்மை நெருங்கணும்

என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கு செல்ல கூடுமோ
நீரே என் நம்பிக்கை
நீரே என் ஆதரவு
உம் சமுகமே போதும்
அதுவே என் ஆனந்தம்

உயிர் கொண்டேன் உம்மாலே
உம்மாலே வாழ்கின்றேன்
நீர் தந்த வாழ்வதனை
உமக்கே தருகின்றேன்

என்னை வனைந்திடுமே
உமக்கே பயன்படுத்தும்
என் மூச்சு திரும்போது
உம்மடியில் சாயணுமே