C

Christhavarae Naam Onru

கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால்

கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால்
வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும்
ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது
நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும்
ஒரு மனமாய் நாம் உழைக்கும் போது
நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும்

எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை
ஒன்றுமே தெரியாதார் யாருமில்லை
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்
கடற்கரை மணல்போல் பெருகிடுவோம்

எங்க சபை உங்க சபை சண்டை வேண்டாம்
பெரிய சபை சின்ன சபை நினைப்பு வேண்டாம்
ஆதிசபை சத்திய சபை பெருமை வேண்டாம்
ஒரு தாய் மக்களாய் இணைந்து வாழ்வோம்

Father என்றும் Pastor என்றும் சண்டை வேண்டாம்
அங்கி என்றும் லுங்கி என்றும் தர்க்கம் வேண்டாம்
மீசையை வளர்ப்பதும் தாடியை வளர்ப்பதும் அவரவர் விருப்பமல்லோ
அன்பு தான் முக்கியம் என்று உணர்ந்திடுவோம்