A

Aayathamaa Aayathamaa

ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை
மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்
பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்
பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அட
இன்று போல் நாளையும் ஆயத்தமா