A

Antha Sooriyan Intha

அந்த சூரியன் அந்த சந்திரன்

அந்த சூரியன் அந்த சந்திரன்
இந்த பூலோகம் யாவும்
அந்த மழைத்துளி இந்த பனித்துளி
இயற்கை அழகு யாவும்
படைப்பே உந்தன் படைப்பே
அதை நினைத்து மனம் மகிழ்ந்து
உம்மை வாழ்த்திடுவேனே

வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்
மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும்
நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே

மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர்
கண்ணீரை இதயத் துடிப்பும் நீரே