E

Ennai Thalatti Seeraadi

என்னை தாலாட்டி சீராட்டி

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர்
என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்
என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்

நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
என் ரணமான மனதிற்கு மருந்தானவர்
என் உயிரோடு உறவாடும் துணையானவர்
இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர்

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர்

என் நண்பனாக அண்ணனாக இருக்கின்றவர்
என் தோளோடு தோள்கோர்த்து வருகின்றவர்
தம் தோள் மீது எனைத் தூக்கி சுமக்கின்றவர்
நான் செய்த தவறுகளுக்காய் தண்டனை பெற்றவர்

கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்
அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர்
நம்மை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்காதவர்
தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர்