பவனி செல்கின்றார் இராஜா
பவனி செல்கின்றார் இராஜா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே எங்கள் சிரசே — பவனி
பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத — பவனி
குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்பல் கும்பலாகவே நடக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற