Y

Yesuvai Nesikka Thodanginen

இயேசுவை நேசிக்க தொடங்கினேன் இயேசுவை நேசிக்க தொடங்கினேன் அது சுகம் மேலான சுகம் உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே அது உன்னை என்றும் ஏமாற்றுமே தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம் ஜீவனைக் காக்கும் மாமருந்தே அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம் இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Y

Yesu Saami Nallavaru

இயேசு சாமி நல்லவரு இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு பாவம் யாவும் மன்னித்தாரு நம்ம சாபங்கள் எல்லாம் தள்ளிட்டாரு நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு இயேசு நம்ம இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு கட்டப்பட்ட மனிதர்களின் கட்டவீழ்க்கும் கர்த்தவர் காயப்பட்ட பிள்ளைகளின் காயங்களை ஆற்றுபவர் கல்வாரி இரத்தத்தை ஊற்றிடுவார் கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிடுவார் – நம்ம நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு…

Y

Yesuvin Kudumpam Onru

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமதானமுண்டு வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார்