E

En Nesarae En Theivamae

என் நேசரே என் தெய்வமே

என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்

எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
பிள்ளையாய் மாற்றினீர்

பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்