E

En Vinnapathai Keatteeraiya

என் விண்ணப்பத்தை கேட்டீரையா

என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீரை கண்டீரையா
எனக்குதவி செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட

ஏல் ஒலாம் தேவனே
சதாகாலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே

வனாந்திரமான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
எதிரிகள் வெள்ளம் போல வந்தாலுமே
துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே

மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உம் கிருபை
மரண இருளில் நான் நடந்தாலுமே
பொல்லாப்புக்கு நான் பயப்படேனே