A

Aaviyaanavare Ennai

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே
என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே

எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய்
உன்னதங்களில் என்னை உட்கார செய்ய
அநுகிரமம் செய்தீர் ஆவியால்

கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால்
மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
துதிக்கட்டும் ஆவியால்

அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியால்
அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்