E

En Yesuve Naan Endrum Unthan Sontham

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்

அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச்செய்யும்

தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்

அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும்

ஆகாரின் அழுகுரலை அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான் உந்தனைத் தேடுகிறேன்