மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
மனமகிழ்ச்சி தந்த மணாளனே ஸ்தோத்திரம்
மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம்
கருணை வைத்ததால் துதிக்கின்றேன் – எந்நாளும்
துதிக்கின்றேன் எந்நாளும்
நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்
நீதிமான்களாய் எங்களை மாற்ற
ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம்
வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம்
வாதைக்கும் துன்பத்திற்கும் விலக்கி மீட்ட
அன்பான தேவனே ஸ்தோத்திரம்
பரலோக தேவனே ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
பாவத்திற்கு எங்களை விலக்கி மீட்ட
ராஜாதி ராஜனே ஸ்தோத்திரம்