E

Enna En Aanantham

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே

கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்
அருளினதாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஐயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்