E

Enthan Poomanai

எந்தன் பூமானைக்காண சிந்தைப் பெருகுதையோ
என்றைக்குக் காண்பேனோ -ஓ-ஓ

சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன் பூமானைக் காண
அழகுடைய அண்ணலேசுவைக் காண — எந்தன்

விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர்
லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் — எந்தன்

இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து
அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் — எந்தன்

பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார்
அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை — எந்தன்

பாதகரின் அடி கன்னத்தில் படும்வேளை என்னை நினைந்திரே நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்?– எந்தன்