I

Immadum Kaathirae

இம்மட்டும் காத்தீரே

இம்மட்டும் காத்தீரே
இனிமேலும் நடத்துவீரே
எதைக் குறித்தும் நான் கலங்கவில்லை
எல்லாமே பார்த்து கொள்வீர்

உலகத்தின் தேவைகளை
உம் பாதம் இறக்கி வைத்தேன்
உம் அன்பின் கரம் நீட்டும்
அற்புதமாய் நடத்தும்

உம்மையே பார்த்துவிட்டேன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
இருளெல்லாம் நீங்கிடட்டும்
வெளிச்சம் உதித்திடட்டும்

அதினதின் காலத்திலே -எல்லாம்
நேர்த்தியாய் செய்திடுவீர்
குறைவெல்லாம் மாறிடுமே
நிறைவாக நடத்திடுமே

எந்தன் கன்மலையும் நீர்
துதிகளின் பாத்திரர் நீர்
ஆலயத்தில் நான் அபயம் இட்டால்
என் கூக்குரல் கேட்பவர் நீர்