காலைதோறும் கர்த்தரின் பாதம்
காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே
மனமே ஏன் கலங்குகிறாய்
மனமே ஏன் தியங்குகிறாய்
ஜீவனுள்ள தேவன் மீது
நம்பிக்கை வை
மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன் மேல் ஆத்துமா
தாகமாய் இருக்கிறதே
வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும்
நான் மேற்கொள்வேன்
இயேசுவின் நாமத்தினால்
அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர் சமூகம் முன்செல்லுமே