I

Isravelae Bhayapadathae Naanae

இஸ்ரவேலே பயப்படாதே நானே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்து கொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்

தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்

எனது கிருபை உனக்குப் போதும்
பலவீனத்திலே என் பெலன் விளங்கும்
பூரணமாக என் பெலன் விளங்கும்
எதற்கும் பயம் வேண்டாம்

துன்ப நேரம் சோர்ந்து விடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு