I

Ithaya Kathavugal

இதய கதவுகள் திறக்கட்டும்

இதய கதவுகள் திறக்கட்டும் இறைவன் எழுந்தருள
பாவ விலங்குகள் உடையட்டும் அமைதி அவர் அருள
இதய வீணை உதய ராகம் மீட்டும் நேரம் வந்தது
இறைவன் அருளால் இதயதாகம் தணியும் நேரமும் வந்தது

விண்ணிலிருந்து விழுந்த விருந்து இதோ
பாவ நோயைப் போக்கும் மருந்து இதோ
ஒரு தென்றல் போல் மனம் துள்ளாதோ
இறை அன்பில் வேட்கை கொள்ளாதோ
உன்னத தேவன் சந்நிதி எங்கும் கூடியிருக்கும் மாந்தரே நீர்

எனது தசையும் எனது இரத்தமுமே
முடிவில்லாத வாழ்வை அளித்திடுமே
என்னை உண்ணும் எவனும் அழிந்திடான்
என்னை பருகும் எவனும் பசித்திடான்
நித்திய ஜீவனை அளிக்கும் தேவனை இதய வீட்டில் ஏற்று மகிழ