N

Netru Indru Naalai

நேற்று இன்று நாளை மாறாதவரே

நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல – அவர்
கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை – அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது – அவர்
செய்கை புரியாது

தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் – உன்னை
விடுவித்து காப்பார்

பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே – இன்றும்
அதைச் செய்வாரே