K

Kanakoodathathai En

காணக்கூடாததை என் கண்கள்

காணக்கூடாததை
என் கண்கள் கண்டபோதும்
கண்ணின்மணி போல
காத்துக்கொண்டீரே
போகக்கூடா தூரம்
என் கால்கள் போனபோதும்
பாதம் கல்லில் இடறாமல்
பார்த்துக்கொண்டீரே
செய்யக்கூடா செய்கை
என் கைகள் செய்தபோதும்
உந்தன் கையில்
என் பெயரை வனைந்தீரே
எண்ணக்கூடா எண்ணம்
என் சிந்தை கொண்டபோதும்
நீர் என்னைத்தானே எண்ணினீரே
இயேசுவே இயேசுவே
எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்
உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன்

உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயா
உம்மைப்போல தெய்வமில்லை