K

Kartharai Enrum

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக
கொண்டவன் எவனோ பாக்கியவான்
வருத்தமின்றி வறட்சி காலத்தில்
தப்பாமல் கனி தருவான்

தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம்
என்றும் விரும்பியே சேர்வாய்
நிலைத்திருந்தே கனி தந்திட
உணர்வின் ஜீவியம் அவசியமே

ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும்
வேர்களை உடையவன் செழிப்பான்
வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல்
பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான்

நற்குல கனியாய் மாறிட உன்னை
நாட்டிய இயேசுவைக் காண்பாய்
உந்தன் இச்சையை நிறைவேற்றாமல்
உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய்