K

Kartharukkul Epozhuthum

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்
சந்தோசமாயிருங்கள்
ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்

இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே

எல்லா புத்திக்கும் மேலான
தேவசமாதானம் இருதயத்தை
இயேசு கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும்

இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
அவர் இருப்பதால் பயம் இல்லையே
தேவன் என் துணையே