A

Ananthamae Jeya Jeya

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர், நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்

சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்

முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையு வெகுணவும்
தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ்

பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால் – புகழ்