M

Manam Pona Paathaiyai

மனம் போன பாதையை

மனம் போன பாதையை நான் மறந்தேன்
இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்
என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்
எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன்

கானல் நீரை நம்பியதாலே
கன்மலைத் தேனை நான் இழந்தேனே
ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை
தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்
ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார்

உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற
உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்
உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்
உலகம் தராத சமாதானம் தந்தார்

நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்
நடைபிணமானேன்
இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்
என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்
இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்