மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே