M

Manam Thirumbum Paavikkellaam

மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே

மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

வந்தனமப்பா வந்தனமே

திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்

இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல

கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே