A

Aayiramai Perugavendum

ஆயிரமாய் பெருகவேண்டும்

ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள்
அதிசயங்கள் காணவேண்டும் தேவா
உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே
உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே

ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்
ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்
ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்
ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்

அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள்
மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்
கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்
எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்

ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்
வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்
மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்