M

Mannika Therinthavarae Manathurukam

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணுக்கு இமைபோல் எம்மை காக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா
விழிநோகப் பண்ணாமல் விரைந்தே நீர் வாருமைய்யா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா

கல்வாரி சிலுவையிலே கர்த்தாவே ரத்தம் சிந்தி
கருணையோடு எம்மைக்காக்க சிலுவையில் ஜீவன்தந்தீர்
வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம்
ஆண்டவரே வாருமைய்யா அன்பு முகம் காட்டுமையா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா

கூப்பிட்ட குரல்கேட்டு குறை தீர்க்க வருபவரே
கொடுமையான வியாதியையும் குணமாக்கும் வைத்தியரே
கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே
கண்ணோக்கிப் பாருமைய்யா கர்த்தாவே வாருமைய்யா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா