N

Neer Indri Vazhvethu Iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன்
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா

எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா