E

En Kirubai Unakku Pothum

என் கிருபை உனக்குப் போதும்

என் கிருபை உனக்குப் போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப்போல உன்னைத் தொடர்வேன் நான்

அமைதித்தோட்டமாக நானும் உலகை உனக்குக் கொடுத்தேன்
ஜாதிப் பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகுவைத்தாய்
சிலுவையின் வழி மீட்பு என்றே சிந்தையில் நீ ஏற்கவில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னைச் சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை

ஒளியை ஏற்றிவைத்தேன் நீயும் இருளைத் தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்யம் எங்கேயென்று மண்ணில் நீ தேடுகின்றாய்
தந்தைக்கு நான் கீழ்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்

என்றைக்குமே ஆட்சிசெய்வேன் நீதியை நிலைநாட்டச்செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு