பரலோக சந்தோஷம் பாரினில்
பரலோக சந்தோஷம் பாரினில் வந்து
என்னைப் பரவசப்படுத்துகிறதே
பரமபிதா நீர் எந்தன் தந்தை
பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன்
புத்திர சுவீகார ஆவியினால்
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்
புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர்
அது உன்னத பெலன் அல்லவா
என் பிரிய இயேசு என் இனிய நேசர்
என்னோடு இருப்பார் என்றும்
ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார்
தெய்வீகமான அன்பே
பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே
அந்தப் பரமனைக் கண்டுகொண்டேன்
அவர் திருவாய் மொழி எனக்கு அருமருந்தாகுமே தினமும்
பலகோடி துதி பாடுவேன்